1. செய்திகள்

ரேசன் கார்டில் மோசடி: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Ration card

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்கள் ரேஷன் திட்டம் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதை நிறையப் பேர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேசன் கார்டு (Ration Card)

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தடுக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாகச் செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955இன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980இன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.27 லட்சம் மதிப்புள்ள, 4813 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.
அதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட 174 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: இனி இது எல்லாமே இலவசம் தான்!

ரேசன் கார்டு மட்டும் போதும்: இந்த சேவையை இலவசமாக பெற!

English Summary: Ration card fraud: Tamil Nadu government action! Published on: 20 September 2022, 07:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.