மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 December, 2021 11:51 AM IST
Chennai: Four tunnels closed

சென்னையில் நேற்று நண்பகல் முதல் பெய்த மிதமான மழை, மாலையிலிருந்து வெளுத்து தொடங்கியது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதித்தது.
பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 4 சுரங்கபாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்து துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த நான்கு சுரங்கப்பாதைகளும்,
1.சென்னை துரைசாமி சுரங்கப்பாதை
2.ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை
3.மேட்லி சுரங்கப்பாதை
4.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகும்.

இந்த திடீர் மழைக்கான காரணம் என்ன?

இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள்,
வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக்கூட்டங்கள் சென்னை பகுதி நோக்கி நகர்ந்து வந்த காரணத்தால், இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவித்தனர்.

 

நான்கு மாவட்டங்களில் ரேட் ஆலர்ட்

சென்னையில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று மாலையில் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் அதித கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மொத்தத்தில் சென்னையில் இது எதிர்பாராத மழை என்றே ஆய்வு மைய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த மழையும் பொது மக்களின் நிம்மதியை வாட்டி வதைப்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

PF கணக்கில் இ-நாமினேஷன் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகம்: பொங்கல் பானையின் விலை உயர்வு, காரணம் என்ன?

English Summary: Chennai: Four tunnels closed, What is the Reason?
Published on: 31 December 2021, 11:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now