News

Wednesday, 21 October 2020 06:55 PM , by: Elavarse Sivakumar

Credit : Justdail

மற்ற காலங்களைக் காட்டிலும், பண்டிகைக் காலங்களில் சிறப்பு தள்ளுபடியில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் போது கிடைக்கும் சந்தோஷம் சற்று மாறுபட்டது.

அந்த வகையில், இந்த தீபாவளி தள்ளுபடியில் கார் அல்லது வீடு வாங்கினால் எப்படி இருக்கும் என எண்ணுபவராக நீங்கள்? உங்களுக்காக வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்து offer அறிவித்திருக்கின்றன சில வங்கிகள்.

அவற்றின் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.

Union Bank of India

யூனியன் வங்கிதான் தற்போது மிகக்குறைந்த வட்டியில் கார் அல்லது கனவு இல்லத்திற்கானக் கடனை அளிக்கிறது. இங்கு வீட்டுக் கடன் வாங்கினால், 6.7% வட்டி. ப்ரோசஸிங் ஃபீஸ் 0.5 சதவீத வட்டி அல்லது அதிகபட்சம் ரூ.15 ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 7.15%

Bank Of India

இந்தியன் வங்கியைப் பொருத்தவரை வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதம் 6.85%
ப்ரோசஸிங் ஃபீஸ் 0.25 சதவீத வட்டி அல்லது அதிகபட்சம் ரூ.20 ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 7.15%

Central Bank Of India

சென்ட்ரல் வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 6.85%. பிராசஸிங் ஃபீஸ் வாங்கும் மொத்தக் கடனுக்கான 0.25 சதவீத வட்டி அல்லது, அதிகபட்சம் ரூ.20 ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 7.30%

 

Canara Bank

கனரா வங்கி 6.90% வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. பிராசஸிங் ஃபீஸ் வாங்கும் மொத்தக் கடனுக்கான 0.50 சதவித வட்டி அல்லது அதிகபட்சம் ரூ.10ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 8.90%

Punjab & Sind Bank

Punjab and Sindh Bank பண்டிகை சலுகையாக 6.90% வட்டியில் வீட்டுக்கடனை வழங்குகிறது. இங்கு அதிகபட்சமாக 7.25 வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
இந்த வங்கி பிராசஸிங் ஃபீஸ் என்று எந்தத் தொகையையும் வசூலிப்பதில்லை. இந்த வங்கியின் கடன் வாங்குவதன் மூலம் 10 முதல் 15 ஆயிரம் ரூபாயை நாம் சேமிக்கவும் முடிகிறது. இதனை நாம் Bumber Offerராகவும் வைத்துக்கொள்ளலாம்.

பிற வங்கிகளின் வட்டி விகிதம்

SBI                  6.95% - 7.10%

HDFC Bank       6.95% - 7.10%

ICICI Bank        6.95% - 7.60%

PNB                  7.00% - 7.60%

Bank of Baroda 7.25% - 8.25%

மேலும் படிக்க...

விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!

மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)