நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 September, 2022 2:34 PM IST
Dramatically low price of fish! What's the pricing situation?

மீன் வரத்து அதிகரித்துள்ளதாலும், மீன்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததாலும் மீன் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களைத் தளமாகக் கொண்டு சுமார் 500-க்கும் மேல் எண்ணிக்கை கொண்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் ஏற்றுமதி வகையான மீன்களான கணவாய், இறால், கிளிமீன் போன்ற மீன்களை பிடிப்பதில் மிகுந்த ஆர்வத்தினைக் காட்டி வருகின்றன.

தற்பொழுது கணவாய், இறால் போன்ற மீன்கள் சீசன் இல்லாத நிலையில் கொழிசாளை, நாக்கண்டம் போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர். இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்குக் கரை திரும்பிய விசைப் படகுகளில் டன் கணக்கில் கொழிசாளை மீன்கள் பிடிபட்டிருந்த நிலையில் அவை விற்பனைக்காக துறைமுகத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், வரத்து அதிகரிப்பினால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது.

பொதுவாக 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கொழிசாளை மீன் 20 ரூபாய் என விலை சரிந்து கோழி தீவனத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்களும் விற்பனையாளர்களும் கவலையடைந்துள்ளனர். மீன்கள் விலையில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு!

நீரைவிலக்கிக் கொண்டு பாய்ந்த படகுகள்! துடுப்புப் போட்டு அசத்திய ராகுல் காந்தி!

English Summary: Dramatically low price of fish! What's the pricing situation?
Published on: 21 September 2022, 02:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now