மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 June, 2021 12:41 PM IST
Credit : Francis India

தமிழகத்தில் கொரோனா நெருக்கடியால் வாழ்விழந்து நிற்கும் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் விரைவில் மூடப்பட உள்ளன.

கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. முதல் அலை ஓய்ந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் ஏற்பட்டது.

கற்க முடியா சூழல் (Unable to learn)

கொரோனா வைரஸ் தொற்று, முதியவர்களை வீட்டிற்குள் முடக்கியதுடன், சிறுகுழந்தைகள் கல்வி கற்க முடியாத இக்கட்டான சூழலைக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

தேர்வுகள் ரத்து (Cancel exams)

அதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரைத் திறக்கப்பட வில்லை. 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்ட போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

கட்டண வசூல் (Charge collection)

அதேபோல, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்ப வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி தனியார் பள்ளிகள் வழக்கம்போல் பள்ளிக் கட்டணங்களை வசூலித்தன.

பாலகர்களுக்கு ஏமாற்றம் (Disappointment for bridges)

அதேநேரத்தில், பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள பாலகர்கள் பலர் பள்ளிக்கு போக முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

பள்ளியை மறக்கும் நிலை (Forgetting school)

இதன் காரணமாக, பள்ளிக் குழந்தைகளைப் பொறுத்தவரை, பள்ளிக்குச் செல்வதே மறந்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக பிரைமரி, நர்சரி பள்ளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றன.

நிலுவையில் கட்டணம் (Outstanding fees)

ஏனெனில் கடந்த 2019ல் இருந்தே கல்விக் கட்டணம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பெற்றோர்களிடம் 75 சதவீத கல்வி கட்டணத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் 25 சதவீத பள்ளிகள் கூட 75 சதவீத கட்டணத்தை பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் வாழ்விழந்து தவித்து வருகின்றன.

தவிக்கும் பள்ளி நிர்வாகம் (Suffering school administration)

இதுதொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், தமிழகத்தில் 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் வாழ்விழந்து நிற்கின்றன. பல பள்ளிகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை கட்ட வேண்டியுள்ளது. மேலும் 50 ஆயிரம் பள்ளி வாகனங்களுக்கு இருக்கை வரி, காப்பீடு, எப்.சி, சாலை வரி உள்ளிட்டவை செலுத்த வேண்டியிருக்கிறது.

10,000 பள்ளிகள் மூடல் (10,000 schools closed)

ஏற்கனவே கல்வி கட்டணம் நிலுவையில் இருப்பதால் மேற்குறிப்பிட்ட வரிகளைச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரைமரி, நர்சரி பள்ளிகளை நம்பியிருக்கும் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்விழந்துத் தவிக்கின்றனர். எங்களின் நிலைத் தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளை நடத்துவதற்கு வாங்கிய கடனை கட்ட முடியாததால் 10 ஆயிரம் பிரைமரி, நர்சரி பள்ளிகளை மூடி விடுவது என முடிவு செய்துள்ளோம். எனவே எங்கள் பள்ளிகளையும், 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களையும் அரசே எடுத்து கொள்ளட்டும். எங்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வாறு நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க...

சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?

85 நாடுகளில் பரவியது டெல்டா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு தகவல்!

English Summary: Echo of financial crisis - 10,000 schools closed in Tamil Nadu!
Published on: 26 June 2021, 05:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now