மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 November, 2020 11:10 AM IST

2021- 2022 ஆண்டுக்கான பயிர் கடன் தொகையை கூடுதலாக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

அடுத்த நிதியாண்டுக்கான பயிர் கடன் நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 2021-22ம் ஆண்டுக்கான பயிர்கடன் தொகை அளவு, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கடன் தொகை அளவு நிர்ணயிப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழு கூட்டம் ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல், மரவள்ளி உள்பட தோட்டக்கலை பயிர்களுக்கான பயிர்கடன் தொகை அளவை கூடுதலாக நிர்ணயம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கடந்த நிதியாண்டைவிட, வரும் 2021- 22ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும், பயிர்க்கடன் அளவுகள் கூடுதலாக நிர்ணயிப்பதற்கு மாவட்ட தொழில்நுட்பக்குழு மூலம் மாநில அளவிலான தொழில்நுட்ப குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

 

கூட்டத்தில் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் பேசும்போது, இயற்கைவழி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து பயிர்க்கடன் அளிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு பயிர் கடன் தொகையை நிர்ணயிக்கப்பட்டு ஆண்டுதோறும் தவறாமல் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை தமிழக அரசே விவசாயிகள் சார்பில் செலுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் பேசும்போது, சம்பா, தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும் என்றார்.


மேலும் படிக்க..

PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?

PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!

வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!



English Summary: Farmers Ask Thanjavur Collector to increase the loan amount given for Crop for the next financial year
Published on: 14 November 2020, 11:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now