மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 May, 2022 11:09 AM IST
Farmer's Produces: Separate seats in Buses

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

குழுவின் தலைவர் டிஆர்பி. ராஜா மற்றும் ஒன்பது எம்எல்ஏக்கள் கோவையில் செவ்வாய்க்கிழமை இரண்டு நாள் பயணமாக நகரின் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வந்தனர்.

சந்தைக்கு வெளியே உள்ள தற்காலிகக் கடைகளால் சந்தைக்குள் கடை வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ராஜா கூறினார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், பேருந்துகளில் கடைசி வரிசை இருக்கைகளை விவசாயிகளுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று கும்பகோணம் எம்எல்ஏ ஜி அன்பழகன் பேசினார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விழிப்புணர்வு மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் குழுவிடம் தெரிவித்தனர். திரு.வி.க.நகர் எம்எல்ஏ பி.சிவக்குமார், 'மஞ்சப்பை' பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். டி.என்.பி.சி.பி., மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஒன்றிணைந்து முக்கிய கடைவீதிகளில் இலவசமாக மஞ்சப்பை விநியோகிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மிக இன்றியமையாத ஒன்றாக இக்காலக் கட்டத்தில் இருக்கின்றது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

உழவர் சந்தையில் உரம் தயாரிக்கும் அலகுகள், தடாகம் சாலையில் உள்ள விதை ஆய்வுக்கூடம், ஜிஎன் மில்ஸ் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகளையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இக்குழு ஒவ்வொரு ஆண்டும் சில துறைகளைத் தேர்வு செய்து, அவர்கள் செயல்படுத்தும் திட்டங்களைச் சரிபார்க்கும் என்று கூறியிருக்கிறார், ராஜா. கோவை மாவட்டத்தைப் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளால் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா - ஓர் பார்வை!

English Summary: Farmer's Produces: Separate seats in Buses
Published on: 25 May 2022, 10:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now