நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 May, 2022 11:05 AM IST
Fire at Kodungaiyur Garbage Depot in Chennai!

சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மே 20 வெள்ளிக்கிழமையன்று தீ விபத்து ஏற்பட்டது மற்றும் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய நடவடிக்கையின் பின்னர் சனிக்கிழமை அதிகாலை அந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, மே 20 வெள்ளிக்கிழமையன்று வட சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மற்றொரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியது. எழில் நகர், நேதாஜி நகர் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகளுக்கும் இந்த் புகை பரவியது. அதிர்ஷ்டவசமாக, 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்ற நடவடிக்கைக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கொருக்குப்பேட்டை, வியாசர்பாட், சத்தியமூர்த்தி நகர், ராயபுரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திருவொற்றியூர், மாதவரம், தொண்டியார்பேட்டை, ராயபுரம், திரு வி.க., ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் வெளியேறின. குப்பை கிடங்கின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளாகிய அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் பரவிய நச்சுப் புகையால், குடியிருப்புவாசிகள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலை அனுபவித்தனர்.

இதுகுறித்து த.மு.மு.க., மண்டல துணை கமிஷனர் (வடக்கு) சிவகுரு பிரபாகரன் பேசுகையில், ''பெருங்குடி சம்பவத்திற்கு பின், முன்னெச்சரிக்கையாக, கொடுங்கையூர் குப்பை கிடங்கில், இரண்டு தீயணைப்பு வாகனங்களை வைத்துள்ளோம். தீ ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, தகவல் அறிந்ததும் உடனடியாகத் தீயை அணைத்தோம். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனவும், காரணம் இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

இங்கு மத்திய, வடமண்டல கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. பெருங்குடி சம்பவத்துக்கு பின், கொடுங்கையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை முன்கூட்டியே கண்டறிந்து பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, உள்ளே முறையான சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த குப்பை கிடங்கில் நாங்கள் சென்றபோது தீ 6 ஏக்கர் வரை பரவியிருந்தது” என்று பிரபாகரன் கூறினார்.

ராயபுரம் மண்டல அலுவலர் மதிவாணன், பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மு. மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். திண்மக்கழிவுகளைக் குப்பை கிடங்கில் போடும் முன், குப்பைகளை தரம் பிரித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர மக்கள், ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாயக்கழிவுகள் மற்றும் தீ விபத்துகளை தவிர்க்க அறிவியல் பூர்வமான குப்பை கிடங்கை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

டெல்டா விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே அமைச்சகம்: ரூ 8.34 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

English Summary: Fire at Kodungaiyur Garbage Depot in Chennai!
Published on: 22 May 2022, 11:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now