மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 December, 2020 5:07 PM IST
Credit : Blue Finger

கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க ஏதுவாக, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துகொள்ளுமாறு (Crop Insurance) பெரம்பலூர், தென்காசி உள்ளிட்ட 3 மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தற்போது ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் வெங்காயம், மரவள்ளி, தக்காளி ஆகியவற்றுக்கு பயிர்காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

பயிர் காப்பீடு (Crop Insurance)

இதன்படி டிசம்பர் 18ம் தேதிக்குள் வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ.1.860ம், பிப்ரவரி 15ம் தேதிக்குள் தக்காளிப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.764ம், மார்ச் 1ம் தேதிக்குள் மரவள்ளிக் கிழங்கிற்கு ஏக்கருக்கு ரூ.1,440ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், தொடர்மழை காரணமாக மகசூல் இழப்பை ஈடு செய்ய ஏதுவாக, உளுந்து, பாசிப்பயறு பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Fasal Bima Yojana

இதனிடையே தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை குறைக்காற்று வீசும் என வானிலை முன்னறிவிப்பு செய்யதிருப்பதால் விவசாயிகள் தங்களுடைய பயிர்களை காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, துவரை, பருத்தி நிலக்கடலை, சூரியகாந்தி, எள் உட்பட ராபி பருவ பயிர்களுக்கு 2020-21ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவைத் தெரிந்துகொண்டு, விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க... 

பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!

அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!

English Summary: Get Insured for Rabi Season Crops- Call for 3 District Farmers!
Published on: 14 December 2020, 01:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now