அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 April, 2023 3:10 PM IST
IRCTC: It's Free for Train Passengers!

ரயில் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் விதிமுறை இருக்கிறது. இதைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியுமா? அதைக் குறித்துதான் இப்பதிவு வழங்குகிறது.

ரயிலில் பயணம் செய்கின்ற லட்சக்கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்து இருக்கின்றது. ஒருவேளை நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பராக இருந்தால் இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. ரயில் பயணிகளுக்கு அவ்வப்பொழுது பல இலவச வசதிகளை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது.

இந்த தகவல் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிடுகையில், இனி ரயிலில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். ஆகவே அடுத்து வரும் நாட்களில் நீங்களும் ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் இனி உங்களுக்கும் இலவசமாக உணவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய விதியின்படி, ரயிலில் பயணம் செய்யும்பொழுது உணவுக்குப் பணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலம் செய்து தரப்படுகின்றது. ஆனால் நிறையப் பேருக்கு அதுபற்றித் தெரிவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால் பயணிகள் இதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வேயில் பயணம் செய்பவர்கள் பலமுறை ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய இருக்கிறது. சில ரயில்கள் தாமதமாக வருகின்றன. அவ்வாறு ரயில் தாமதமாக வந்தால், ரயில்வே தரப்பில் இருந்து இலவச உணவு வசதி கிடைக்கும் எனக் குறிக்கின்றது. குறிப்பிட்ட சிறப்பு பயணிகளுக்கு இலவச உணவு வசதியை ரயில்வே வழங்கி வருகின்றது.

IRCTC விதிகளின்படி, பயணிகளுக்கு இலவச உணவு வசதி வழங்கப்படுகின்றது. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்பொழுது இந்த வசதி உங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது. சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இந்த உதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆன்லைன் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த உணவு வழங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏதேனும் காரணத்தினால் ரயிலை தவறவிட்டாலும், பணத்தைத் திரும்பப் பெறலாம். இதற்காக, ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TDR படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட் கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

30 நிமிடங்களில் உடல் எடை குறைய வேண்டுமா? இதைச் செய்யுங்கள்!

இந்த கோடையில் மாம்பழங்களை எப்படி வாங்குவது? கவனத்தில் கொள்ள வேண்டியவை!

English Summary: IRCTC: It's Free for Train Passengers!
Published on: 24 April 2023, 03:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now