News

Friday, 14 July 2023 01:07 PM , by: Poonguzhali R

Mettur Dam's water flow is suddenly increasing! Farmers are happy!

மேட்டூர் அணையில் வரும் நீரின் அளவு 130 கன அடியாக அதிகரித்து இருக்கின்றது. இந்நீரின் வருகை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீர்வரத்து, நீர் இருப்பு குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் அணைக்கு வருகின்ற நீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்துகொண்டே வந்தது. ஆனால் இன்று காலை நேர நிலவரத்தின்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 130 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரத்தின்படி 79.40 அடியிலிருந்து 78.51 அடியாக சரிந்து இருந்தது. அணைக்கு வந்த நீரின் அளவு வினாடிக்கு 161 கன அடியிலிருந்து வினாடிக்கு 107 கன அடியாக சரிந்து காணப்பட்டது.

ஆனால் இன்று நீரின் வரத்து அதிகரித்து இருப்பதால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 107 கன அடியிலிருந்து வினாடிக்கு 130 கன அடியாக அதிகரித்து அணையின் நீர் இருப்பு வீதம் அதிகரித்து வருகிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வெளிவந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 39.61 டி.எம்.சி ஆக இருக்கிறது.

மேலும் படிக்க

விவசாயிகளால் தொடங்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்! புதுவை விவசாயிகள் அசத்தல்!!

கோவையில் விவசாயிகள் நூதனப் போராட்டம்! கஞ்சி தொட்டி திறந்து ஆர்பாட்டம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)