நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 May, 2023 12:37 PM IST
Nilgiris Summer Festival: A Fruit Fair!

குன்னூரில் பழங்கள் கண்காட்சி நிறைவடைந்த நிலையில் நீலகிரி கோடை விழா இனிதாக நிறைவு பெற்றது. 30.30 கோடியில் நான்கு வெவ்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர், ரூ.13.55 கோடியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் நீலகிரி கோடை விழாவின் நிறைவாக, குன்னூரில் உள்ள சிம்ஸ்பார்க்கில் 63-வது ஆண்டு பழ கண்காட்சி நிறைவடைந்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இரண்டு நாட்களில் சுமார் 22,016 சுற்றுலாப் பயணிகள் இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

நிறைவு விழாவில் சிறந்த பழத்தோட்டம், மிதவெப்ப மண்டல பழங்கள், வெப்பமண்டல பழங்கள், அதிக பழ வகைகள் மற்றும் பழ பொருட்கள் அமைத்தவர்களுக்கு மொத்தம் 113 பரிசுகளை வெலிங்டன் கன்டோன்மென்ட் முதன்மை செயல் அதிகாரி முகமது அலி வழங்கினார்.

பழங்கள், பழக்கூடை, மண்புழு, பிரமிடு ஆகியவை ஜாம், ஜெல்லி போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் போன்ற பழங்கள் சேதமடையாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவை மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாலை நடைபெற்ற வால்பாறை கோடை விழா நிறைவு விழாவில், 111 பயனாளிகளுக்கு ரூ.39.11 லட்சம் நிதியுதவியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

30.30 கோடியில் நான்கு வெவ்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர், ரூ.13.55 கோடியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு பணிகளைத் தொடங்கி வைத்தார். குறுகிய காலத்தில் கோடை விழாவை சிறப்பாக நடத்தி முடித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளையும் அவர் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

TNAU வடிவமைத்த வேளாண் கருவிக்கு தேசிய காப்புரிமை- அப்படி என்ன ஸ்பெஷல்?

குடிநீரில் குரோமியம்! ஓசூரில் வாழ்வாதாரம் பாதிப்பு!!

English Summary: Nilgiris Summer Festival: A Fruit Fair!
Published on: 31 May 2023, 12:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now