News

Saturday, 14 May 2022 05:07 PM , by: Poonguzhali R

NIRDPR 2022: Good Job Opportunities for Graduates!

நீங்கள் பட்டம் பெற்றிருந்தால், நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்ய நிறுவனம் (NIRDPR) பயிற்சி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 15 பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட உள்ளன.

இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் ஆங்கில மொழி அறிவும் இருக்க வேண்டும். இருப்பினும், கல்வித் தகுதி தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.

மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும், முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
NIRDPR 2022 வேலை வாய்ப்பினைப் பெற @nirdpr.org.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி இன்று என்பதை விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்றே விண்ணப்பிக்கவும்.

NIRDPR வெளியிட்டுள்ள தகவலின்படி, பயிற்சி மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், அறிவிப்பை முழுமையாக படித்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் தவறான தகவல் கிடைத்தால், விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படலாம். எனவே கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

பயிற்சி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படும். அதே நேரத்தில், இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான @nirdpr.org.in -ஐப் பார்வையிட வேண்டும்.

மேலும் படிக்க

தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக உள்ளது: பட்டியலில் மதுரை முதலிடம்

விவசாயத்திற்கு 5 லட்சம் கடன் பெறலாம்! விவரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)