சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 May, 2022 10:01 AM IST
No plans to raise train fares in India.....
No plans to raise train fares in India.....

இந்தியாவில் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ரயில் டிக்கெட் கட்டணம் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.

இதன் அடிப்படையில், டீசல் இன்ஜின்களில் இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டு இருந்தது.

ரயில் தண்டவாளத்தில் யானைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதைத் தடுக்க இந்திய ரயில்வே பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி மாணவர்கள் அடுத்த தலைமுறை போக்குவரத்து மாற்றத்துக்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். 5ஜி சேவைக்கான பணியும் நடந்து வருகிறது. மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானைகள் கடந்த பாதையை நீண்ட நேரம் நினைவில் வைத்துக்கொண்டு அதே பாதையில் திரும்ப செல்வதாக கூறினார். யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்லும், தண்டவாளங்களை உயர்த்தப்பட்டு, யானைகளுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்.

தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் ரூ.760 கோடி செலவில் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வேக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. தமிழக ரயில்வேக்கு ரூ.3,861 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி மாணவர்களுக்கான ஹைப்பர் லூப் திட்டத்துக்கு மத்திய ரயில்வே ரூ.8.5 கோடி வழங்கியது. புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயன்படுத்துவது சாத்தியமானதுதான். வரும் காலங்களில் ரயில் கட்டணம் உயர வாய்ப்பில்லை.

பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் அப்படியே உள்ளது

இருப்பினும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 50% கட்டணச் சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என்றார். கொரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நீடிக்க வாய்ப்பு இல்லை என கூறினார்.

மேலும் படிக்க:

உயருகிறது ரயில் டிக்கெட் கட்டணம்-பயணிகளுக்கு அதிர்ச்சி!

உயரப் போகுது பஸ் கட்டணம்: தமிழக அரசு ஆலோசனை!

English Summary: No plans to raise train fares in India: Railway Minister Aswini Vaishnav!
Published on: 20 May 2022, 10:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now