மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 May, 2023 12:19 PM IST
Palm workers are on hunger strike for the 5th day in Poorikudisai area

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் பூரிகுடிசை பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பனையேறிகளின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 13 ஆம் தேதி மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கள் இறக்குவதற்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டது. மேலும் பனைத்தொழிலில் ஈடுப்பட்டு வந்த தொழிலாளர்களை கள்ளச்சாராய வழக்கில் போலீசார் போலியாக கைது செய்துள்ளதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து பூரிகுடிசையில் பனையேறிகள் ஒருங்கிணைந்து, பனைவெல்லம் உற்பத்தியாளர் தொழிற் கூட்டுறவு சங்க கொட்டகை வளாகத்தில் கடந்த 27 ஆம் தேதி காலை 11:00 மணி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

பனையேறிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் விவரம்:

* தமிழ்நாட்டில் உடனடியாக கள் தடையை நீக்கி, கள்ளை இறக்கவும் பருகவும் விற்கவும் பனையேறிகளுக்கு உள்ள உரிமையை உறுதி படுத்திட வேண்டும்.

*சாராயப் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பனையேறிகளை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.

* பனையேறிகள் மீது சாராய பொய் வழக்கு புனைந்த காவல்துறை அலுவலர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* பூரிகுடிசை கிராம பெண்களை தகாத வார்த்தைகளை பேசி இழிவு படுத்திய கஞ்சனூர் காவல்துறை ஆய்வாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

முன்னதாக தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், இன்ஸ்பெக்டர் சேகர், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், வி.ஏ.ஓ வாசு ஆகியோர் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டமானது தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது. இந்த அறவழி போராட்டத்திற்கு பனையேறிகள், பனை செயல்பாட்டாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொது மக்கள் என அனைவரும் வருகை தந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

பனைத்தொழில் சார்ந்து இயங்கும் நுகர்வோர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருவதால் உண்ணாவிரத போராட்டம் வீரியம் அடைந்துள்ளது. தமிழக அரசும், அரசு உயர் அதிகாரிகளும் பனையேறிகளின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

pic courtesy: பாண்டியன் பனையேறி (FB)

மேலும் காண்க:

PM kisan 14 வது தவணை வழங்கும் உத்தேச தேதி அறிவிப்பு!

English Summary: Palm workers are on hunger strike for the 5th day in Poorikudisai area
Published on: 31 May 2023, 12:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now