மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 October, 2020 8:37 PM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்புகளில், இந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் பத்து (10) இளங்கலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த படிப்புகளுக்கு 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. 50,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

எனவே இன்று (15.10.2020) வெளியிடப்படுவதாக இருந்த வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது தரவரிசைப் பட்டியல் 23.10.2020 அன்றும், சிறப்பு தரவரிசை பட்டியல் 28.10.2020 அன்றும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர் சேர்க்கைப்பிரிவு தலைவர் மற்றும் முதன்மையருமான முனைவர் மா. கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். செப்.29ம் தேதி வெளியிடப்படவிருந்த தரவரிசைப்பட்டியல், கொரோனா நெருக்கடி காரணமாக அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மாடுகளின் மடிநோய்க்கு மகத்தான மருந்து- தயாரிப்பது எப்படி?

50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்!

English Summary: Postponement of ranking list for agricultural degrees again!
Published on: 15 October 2020, 08:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now