News

Saturday, 02 July 2022 06:34 PM , by: T. Vigneshwaran

Sandals For elephant

நெல்லையப்பர் கோவில் யானை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் , யானைக்கு ரூ.12,000 மதிப்பில் தோல் செருப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால் வலியால் யானை அவதியுறாமல் இருக்க பக்தர்கள் ரூ.12,000 மதிப்புள்ள 4 தோல் செருப்புகளை வழங்கியுள்ளனர்.

திருநெல்வேலி நகர்ப்‌ பகுதியில்‌ உள்ள 2000 ஆண்டுகள்‌ பழமை வாய்ந்த நெல்லையப்பர்‌ கோவில் யானையின் பெயர் காந்திமதி. 13 வயதில் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்கு தற்போது 52 வயது ஆகிறது. இநிலையில் சமீபத்தில் உடல்நலைக்குறைவு காரணமாக யானை பரிசோதித்த மருத்துவ குழுவினர், யானை வயதுக்கேற்ற எடையை விட 300 கிலோ அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் எடையை குறைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர்.

இதனால் நாள்தோறும்‌ யானையை நடைபயிற்சி அழைத்துச்‌ செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாக கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம்‌ கொடுப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. தொடர்‌ உணவு கட்டுப்பாடு மற்றும்‌ பயிற்சிகளை மெற்கொண்டதில், யானை 6 மாதத்தில்‌ சுமார் 150 கிலோ எடை குறைந்துள்ளது. தற்போது யானை சரியான எடையை அடைந்திருந்தாலும்‌, வயது முதிர்வின்‌ காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால்‌ யானை நீண்ட நேரம்‌ நடப்பதற்கும்‌, நிற்பதற்கும்‌ முடியாமல் சிரமப்படுகிறது. எனவே நடக்கும் போது கால் வலி ஏற்படாமல் இருக்க, யானை காந்திமதிக்கு மருத்துவ குணம்‌ வாய்ந்த ரூபாய்‌ 12,000 மதிப்பிலான தோல்‌ செருப்பை செய்த பக்தர்கள்‌ வழங்கியுள்ளனர். மேலும் மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும்‌ மருத்துவ குணம் கொண்ட செருப்பு உதவியாக இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். தமிழகத்திலேயே நெல்லையப்பர்‌ காந்திமதி அம்மன்‌ கோயில்‌ யானைக்குதான்‌ முதல்‌ முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

7th Pay Commission: ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)