1. செய்திகள்

7th Pay Commission: ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்

T. Vigneshwaran
T. Vigneshwaran
7th Pay Commission

மத்திய ஊழியர்களின் காத்திருப்பு முடிவடையவுள்ளது. இப்போது ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயரப் போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது இன்று தெரியவரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது. ஏஐசிபிஐ-இன் இதுவரையிலான தரவுகளின்படி, 5% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பது தெரிகிறது. இன்று மே மாதத்திற்கான ஏஐசிபிஐ பணவீக்க தரவு வர உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரித்தால், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால், அகவிலைப்படி உயர்வால், ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

அகவிலைப்படியின் அதிகரிப்பு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 இல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக அகவிலைப்படியில் 5% அதிகரிப்பது தெளிவாகியுள்ளது. அதாவது, இப்போது ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். எனினும், இன்று மே மாத புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 6% அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஏஐசிபிஐ இன்டெக்ஸ் சொல்வது என்ன?

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீட்டில் சரிவு இருந்தது. ஆனால் அதன் பிறகு ஏஐசிபிஐ- இன் புள்ளிவிவரங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் 125.1, பிப்ரவரியில் 125 மற்றும் மார்ச் மாதத்தில் 126 ஆக இந்த தரவு இருந்தது.

மேலும் படிக்க

தமிழக அரசு: விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது!

English Summary: 7th Pay Commission: Salary increase up to Rs. 40,000 Published on: 01 July 2022, 06:47 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.