மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2020 11:06 AM IST

மீன் வளர்ப்புக்கு ஆர்வமுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து, மீனவ மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2020-21ன் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் மானியம் பெற மீனவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் பண்ணை குட்டை அமைத்து மரபணு மேம்படுத்தப்பட்ட ‘கிப்ட் திலேப்பியா’ மீன் வளர்ப்பு செய்வதற்காக பண்ணைக்குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகள், தீவனம் மற்றும் சுற்று வேலி அமைத்தல் ஆகிய செலவினங்களுக்கு மீன்வளத்துறை மூலம் மானியம் 40 சதவீதம் வழங்கப்படுகிறது.

40 சதவீதம் மானியம்

அதில் ஒரு அலகிற்கு அதிகபட்சம் ரூ.99,000 செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.39,600 வரை மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த ஒரு வார காலத்துக்குள் முகவரி எண்:16, 5-வது குறுக்கு தெரு, காந்திநகர் காட்பாடி, வேலூர் என்ற விலாசத்தில் செயல்பட்டு வரும் வேலூர் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொலைப்பேசியிலோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயன் அடைய கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பங்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மீன் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பயன் அடையலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க..

PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

எல்லை பாதுகாப்பு படையில் வேலை! எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள் - முழுவிபரம் உள்ளே!

விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்...

English Summary: Tamil Nadu Fisheries department calls the farmers to get benefit of 40 percent subsidy for fish farming
Published on: 16 October 2020, 11:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now