1. செய்திகள்

விவசாயம் செய்ய நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடன் 44% மானியத்துடன்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : registrationwala

இந்த கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையிலும் விவாசயத்தொழிலை லாபகரமானதாக மாற்ற மத்திய -மாநில அரசுகள் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக பிரதமர் மோடியின் அரசும் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், தற்போதைய விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. நீங்களும் விவசாயம் அல்லது அதைச் சார்ந்த துறைகளில் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? அப்படிஎன்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.

இப்போது, விவசாயி, விவசாயத்துடன் இணைந்த ஒருவர் அல்லது அதில் சேர விரும்பும் ஒருவர் புதிதாக விவசாய வர்த்தக வணிகத்தை தொடங்க விரும்பினால் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த தொகையை அக்ரி கிளினிக் (Agri Clinic) மற்றும் அக்ரி வணிக மைய திட்டம் (Agri Business center scheme) மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடன் பெற நினைப்பவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வகுப்பு தேவைப்படும். அதன் பின்னர் நீங்கள் தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால் நபாரட் வங்கி (NABARD வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) கடன் வழங்கும்.

Read This 

தீபாவளி பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க அரசு முடிவு?

அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி வணிக மைய திட்ட சலுகைகளைப் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

விவசாய வணிகம் தொடர்பான பயிற்சிக்கு ஒரு கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். அந்த பயிர்சி மையங்கள் அனைத்தும் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAG - National Agricultural Extension Management Institute) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிறுவனம் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது

 

அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி வணிக மைய திட்ட கடன் தொகையும் & மானியமும்!

பயிற்சி முடிந்ததும், விவசாயம் அல்லது அதைச் சேர்ந்த ஒரு தொழிலைத் தொடங்க விண்ணப்பதாரர்களுக்கு நபார்டில் (NABARD Bank) இருந்து கடன் வாங்க முழு உதவி வழங்கப்படும். வேளாண் தொழிலைத் தொடங்க, விண்ணப்பதாரர்களுக்கு (தொழில் முனைவோர்) ரூ .20 லட்சம் வரையிலும், ஐந்து நபர்கள் அடங்கிய குழுவுக்கு ரூ .1 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக, பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 36% மானியமும், பிற்படுத்தப்பட்ட பிரிவின், பழங்குடி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 44% மானியமும் வழங்கப்படுகிறது.

அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி வணிக மைய திட்டத்தின் குறிக்கோள்கள்

வேளாண் பட்டதாரி, முதுகலை அல்லது டிப்ளோமா படிப்பை முடித்த ஒருவர் விவசாயம் தொடர்பான வர்த்தக வணிகங்களைச் செய்ய உதவும் வகையில், மத்திய அரசு இந்த கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், மேலும் அந்த பகுதியின் விவசாயிகளையும் முன்னேற்ற முடியும் அரசு நம்புகிறது.

இந்தத் திட்டம் குறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும். வேளாண் வணிகம் குறித்த கூடுதல் தகவலுக்கு, கட்டணமில்லா எண் - 1800-425-1556, 9951851556 ஐ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க..

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!

English Summary: Get 36% Subsidy on Rs 20 Lakh Loan by NABARD here the Direct Link to Apply for Profitable Agriculture Business Published on: 13 October 2020, 06:54 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.