மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 April, 2022 1:04 PM IST
Tamil Nadu: Rs 500 fine for not wearing face mask in public places

மீண்டும் தமிழகத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மீண்டும், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சில பகுதிகளில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முன்பே, செய்தியாளர்களிடம் பேசிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். மேலும், அரசு முககவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுப்பியிலிருந்து மட்டுமே விலக்களித்திருப்பதை குறிப்பிட்ட அவர், பொது இடங்களில் முககவசம் கண்டிப்பாக அணிவது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நால்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா அதிகரிப்பைக் கண்டு மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை, என மத்திய அரசு குறிப்பிட்டு இருப்பது சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றைத் தவிர்க்க பொது இடங்களில் மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு தமிழகத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் குறைக்க சமூக இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்தல் அவசியமாகும். தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துக்கொள்ள முன் வர வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை ஐஐடியில் தொற்று உறுதியானவர்களின் நிலைமை சீராக உள்ளதை, அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, பேசிய நால்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வரும் நாளில் தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றார்.

மேலும் படிக்க:

முககவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை

தமிழகம்: பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தயார் - பதிவிறக்கம் செய்யலாம்

English Summary: Tamil Nadu: Rs 500 fine for not wearing face mask in public places
Published on: 22 April 2022, 01:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now