News

Tuesday, 30 August 2022 10:37 AM , by: Deiva Bindhiya

TANHODA: Plan to set up banana cluster: Call for agencies

தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை (TANHODA) தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB), வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால், தேனி வாழை கிளஸ்டரில், கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தை (CDP) செயல்படுத்துவதற்காக கிளஸ்டர் மேம்பாட்டு முகமையாக (CDA) அடையாளம் காணப்பட்டுள்ளது. CDA ஆனது, தேனி வாழைப்பழ கிளஸ்டரின் மதிப்புச் சங்கிலியின் வெவ்வேறு விதமாக செயல்படுத்த, செயல்படுத்தும் முகமை / முகமைகளை (IAs) பரிந்துரைக்கும், அதாவது-

a) முன் தயாரிப்பு மற்றும் தயாரிப்பு, (PRE-production and Production),
b) அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை & மதிப்பு கூட்டல் (Post-Harvest Management & Value Addition)
c) லாஜிஸ்டிக்ஸ், மார்க்கெட்டிங் & பிராண்டிங். (Logistics, Marketing & Branding)

தேனி வாழை கிளஸ்டருக்கான கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஆன்லைன் போர்ட்டல் (http://www.nhb.gov.in/OnlineApplication/RegistrationForm.aspx) மூலம் சமர்ப்பிக்க தகுதியுள்ள செயல்படுத்தும் (Agencies) முகவர்களிடமிருந்து TANHODA முன்மொழிவுகளை அழைக்கிறது.

ஆர்வமுள்ள ஏஜென்சிகள் www.nhb.gov.in மற்றும் https://tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளங்களிலிருந்து கூடுதல் தகவல்களையும், “முன்மொழிவுகளுக்கான அழைப்பு” சமர்ப்பிப்பதற்கான நடைமுறையையும் பெறலாம்.

மேலும் படிக்க: ரயில் டிக்கெட் கென்சல் செய்தால் GST.. மத்திய அரசு புதிய விதிமுறை!

முன்மொழிவுகளைப் பதிவேற்றுவதற்கான கடைசித் தேதி 25.10.2022. தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமைக்கு (TANHODA) எந்த நேரத்திலும் ஏலத்தை ரத்து செய்ய அல்லது RFP ஆவணத்தில் குறிப்பிடப்படாத விதிமுறைகளில் ஏதேனும் திருத்தம்/திரும்பப் பெற உரிமை உண்டு என்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்திக்குறிப்பினை தமிழ்நாடு தோட்டக்கலை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், (TANHODA) நிர்வாக இயக்குநர். மேலும் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க:

ஈஷா விவசாய கருத்தரங்கம்: இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வு!

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் உணவுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)