News

Monday, 15 February 2021 03:21 PM , by: Daisy Rose Mary

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மூலதன நிதியில் இருந்து தேவையான வேளாண் கருவிகளை வாங்கி விவசாயிகள் பயன் பெறலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்துறை தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் இடையேயான வேளாண் கருவிகள் வாங்குவது தொடர்பாக ஆலோசனைக்கூடம் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணை இயக்குனர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார், அப்போது, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம்

கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறையின் மூலம் 30 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இக்குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5 லட்சம் மூலதன நிதியாக வழங்குகிறது. அதன் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் கருவிகளை வாங்கி பயன்பெறலாம் என்றார்.

பண்ணை கருவிகள் கண்காட்சி

கூட்டத்தைதொர்ந்து, வேளாண் பண்ணைக்கருவிகள் விற்பனையாளர்கள் சார்பில் எந்திர உழுவை, சமன்படுத்தும் கருவி, எந்திர தெளிப்பான், எந்திர களை எடுக்கும் கருவி, நடவு எந்திரம், சிறிய கதிர் அறுவடை எந்திரம் போன்ற பல்வேறு வேளாண் கருவிகளின் கண்காட்சி நடைபெற்றது.

மேலும் படிக்க..

பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி!

‘இனிப்பு புரட்சி’-யில் இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்!!

வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)