News

Monday, 23 May 2022 10:06 AM , by: Deiva Bindhiya

TNPSC: Allegation that the questions were incorrect, board explanation

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ, இன்னும் 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலிப்பணியிடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது குறிப்பிடதக்கது.

5413 காலிப்பணியிடங்களுக்கான, இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1.83 லட்சம்பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பல கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், ஒருசில கேள்விகள் தவறாக இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த தகவலை மறுத்த TNPSC தேர்வாணையம், இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: 1 கிலோ மட்காத குப்பைக்கு ரூ.5 பெறலாம்! எப்படி?

அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில், தவறான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: நாட்டுக்கோழி பண்ணை அமைப்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை

விடைக்குறிப்பு மீது தேர்வர்கள், தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது. எனவே, தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை, இணையதள வாயிலாக தெரிக்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

தென்மேற்கு பருவமழை 23ந்தேதியே தொடங்கும்: வானிலை நிலவரம்

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)