மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 May, 2022 11:01 AM IST
Asani storm in Tamil Nadu...

அசனி புயல் காரணமாக ஒடிசாவின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னையில் இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அசானி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை இன்று இரவு அடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மற்றும் கேந்த்ராபாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஒடிசாவில் 113 இடங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல் ஆந்திராவில் கடலோரப் பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே 11 பேருடன் சென்ற படகு பழுதாகி கடலில் கவிழ்ந்தது.

புயல் காரணமாக கரை திரும்ப முடியாத நிலையில் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்டனர். அப்போது, ஹெலிகாப்டர் கடற்கரையில் தாழ்வாக பறந்ததால், ஒவ்வொருவராக கீழே குதித்தனர்.

அசானி புயல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பதி ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி, வாணியம்பாடி பகுதிகளில் இரவு 10 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் துண்டிக்கப்பட்டன. மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேலும் படிக்க:

கொங்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

English Summary: Weather forecast: Asani storm will rain for 3 days in Tamil Nadu!
Published on: 10 May 2022, 11:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now