மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 April, 2023 11:03 AM IST
white spot disease has affected shrimp farming over the past month

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 100 ஏக்கருக்கு மேலான இறால் வளர்ப்பு பண்ணையிலிருந்த இறால்கள் வெள்ளைப்புள்ளி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன என இறால் வளர்ப்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இறால்கள் வெள்ளைப்புள்ளி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் 40 ஹெக்டேர் அளவிலான இறால் வளர்ப்பு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறால் வளர்ப்பு இலாபகரமான தொழிலாக மாறியுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் தூர்வாரப்பட்ட குளத்தில் சுமார் 4000 கிலோ இறால் உற்பத்தி செய்ய இயலும். மற்ற விவசாய முறைகளை ஒப்பீடும் போதும் இதில் முதலீட்டுக்கு ஆபத்து குறைவாக இருக்கும். மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இறால் குஞ்சுகள் சந்தைக்கு ஏற்ற அளவிற்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் இறால் வளர்ப்பில் உள்ள பெரிய பிரச்சினை இறாலை தாக்கும் நோய்க்காரணிகள் தான்.

இந்நிலையில் தான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீர்வாழ் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக வெள்ளைப் புள்ளி வைரஸ் நோய் தாக்குதலால் இறால்களின் குழுக்கள் பெருமளவில் அழிந்து வருவதாக இறால் வளர்ப்பு விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். நாகூர் மற்றும் கோடியக்கரைக்கு இடைப்பட்ட கடற்கரையோரத்தில் இறால் வளர்க்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இறால் பண்ணை அமைத்துள்ள எம்.சந்திரபோஸ் கூறுகையில், “ஒரு மாத வயதுடைய டன் கணக்கான இறால்கள் வைரஸ் நோயால் இறந்தன. இதனால் எனக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. நான் வழக்கமாக 15 டன் இறால்களை அறுவடை செய்கிறேன். ஆனால் அறுவடை செய்யப்பட்ட 200 கிலோ இறால் மட்டுமே ஆரோக்கியமானதாக மாறியுள்ளது. மற்றவை நோய் தாக்குதலால் இறந்துள்ளன."

மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நோய் முதன்மையாக திரவத்தால் பரவுகிறது. "ஒரு பண்ணையில் பாதிக்கப்பட்ட இறால்களை எடுத்து மற்றொரு பண்ணையில் விடுவதன் மூலமும் இந்நோய் எளிதில் பரவக்கூடும்" என்றார்.

இதனிடையே நோய் பரவுவதை தடுக்க பண்ணை குட்டைகளில் குளோரினேட் செய்யுமாறு விவசாயிகளுக்கு நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் போக்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பண்ணைகளுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மீன் வளர்ப்பு, கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.பி.இ.டி.ஏ. (MPEDA) கடந்த ஒரு மாதமாக இந்த நோய் தாக்குதலின் தீவிரம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

pic courtesy : express/krishijagran edit

மேலும் காண்க:

இந்தியாவின் நீர்நிலைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு- ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகள் எத்தனை?

English Summary: white spot disease has affected shrimp farming over the past month
Published on: 25 April 2023, 10:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now