News

Saturday, 04 June 2022 12:26 PM , by: Elavarse Sivakumar

நீங்கள் செய்யும் இந்தத் தவறால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. இது போன்ற எச்சரிக்கைகளை எஸ்பிஐ வங்கி அடிக்கடி விடுப்பது வாடிக்கையாகி வருகிறது.

ஓடிபி

பொதுத்துறை வங்கிகளில் மிகப் பெரியதாக விளங்குவது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படுத் பாரத ஸ்டேட் வங்கி. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் தங்களுடைய ஓடிபி நம்பரை யாரிடமும் பகிரவேண்டாம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

பகிரக்கூடாது

OTP என்பது வங்கி விஷயத்தில் மிக முக்கியமான ஒன்று. பணம் அனுப்புவது போன்ற பரிவர்த்தனைகளுக்கு OTP நம்பர் மூலமாகவே உறுதிப்படுத்தும் ஒப்புதல் வழங்கப்படுகிறது.வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளர் தங்களது கணக்கிலிருந்து யாருக்காவது பணம் அனுப்பும்போதுகூட இந்த OTP கேட்கப்படுகிறது.

இந்த OTP நம்பர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வங்கி தரப்பிலிருந்து அனுப்பப்படுகிறது. இதை அந்த வாடிக்கையாளர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவரிடம் இதைத் தெரிவிக்கக்கூடாது. இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

  • ஷேரிங் என்பது கேரிங் கிடையாது எனவும், OTP நம்பரை ஷேர் செய்யக்கூடாது.

  • அதோடு, “என்னை யாரிடமும் ஷேர் செய்ய செய்யக்கூடாது; மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்; நான் யார்?” என்று கேள்வி கேட்டு, அதற்கு ”OTP" என்ற பதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக இந்த மாதிரியான பதிவுகளை அவ்வப்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- முழு விபரம்!

தபால் நிலையங்களில் கடலை மிட்டாய் விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)