மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 December, 2020 9:01 AM IST

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில், கறவை மாடுகள் (Dairy cows) வழங்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பழங்குடியின விவசாயிகள் (Tribe) மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

  • 50 பேருக்கு முழு மானியத்துடன் கறவை மாடுகள் (Dairy Cows) வழங்கப்படுகின்றன.

  • தகுதி மூப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கறவை மாடுகள் வழங்கப்படும்.

  • பயனாளிகள், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவராகவும் பழங்குடியினராகவும் இருக்க வேண்டும்.

  • விதவையர் மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • கிராம ஊராட்சியில்நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2

  • சாதி சான்றிதழ்

  • வருமானச் சான்று

  • இருப்பிடச் சான்று

  • குடும்ப அட்டை

  • ஆதார் அட்டை

  • வங்கிக் கணக்கு புத்தகம்

  • வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பதற்கான சான்று

  • பால் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகப் பதிவுச்சான்று

ஆகியவற்றின் நகல்களுடன் துறையூர் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகவல்
க.சிவராசு,
திருச்சி மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!

41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!

தெளிப்பு நீர் பாசனத்திற்கு 100% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

English Summary: Free Dairy for Indigenous Farmers - Apply Now!
Published on: 26 December 2020, 08:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now