Animal Husbandry

Monday, 05 October 2020 11:16 AM , by: Elavarse Sivakumar

நாட்டுக் கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க, அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திப் பயனடையலாம்.

  • நாட்டுக் கோழி வளர்ப்பில் கிராம மகளிர் நோய் தடுப்புக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை.

    ஆனால் நாட்டுக் கோழி வளர்ப்பைப் பொருத்தவரை, முக்கிய எதிரியே வெள்ளைக் கழிச்சல் நோய்தான்.

  • இதனைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் கால்நடை நிலையங்களில் அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

  • தற்போது ஆண்டுக்கு 200 முட்டைகள் இடும் கிரிராஜா, வனராஜா போன்ற கலப்பின நாட்டுக் கோழிகள் அறிமுகமாகி உள்ளன. இவை அடை காக்காது.

  • இவற்றின் முட்டைகளை நாட்டுக் கோழிகள் மூலம் அடைவைத்து குஞ்சுகளைப் பெறலாம்.

  • எனவே இக்கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க 60ம் நாள் முதல் தடுப்பூசியும், பின்பு 6 மாதங்களுக்கு ஒரு தடவையும் தடுப்பூசி போட வேண்டும்.

தகவல்
வி.ராஜேந்திரன்
முன்னாள் கால்நடை இயக்குனர்

மேலும் படிக்க...

கோழித் தீவனங்களை பரிசோதிப்பது மிக மிக அவசியம்!

எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)