1. கால்நடை

கோழித் தீவனங்களை பரிசோதிப்பது மிக மிக அவசியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
It is very important to test the poultry feed during the rainy season- Advice for poultry farmers!
Credit : Food safety news

கோழிகளுக்கு வழங்கும் தீவனங்களில் பூஞ்சான் நச்சின் தாக்கம் உள்ளதால் பரிசோதிப்பது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • இனி வரும் நாள்களில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கில் இருந்து வீசக்கூடும்.

  • வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சமாக 93.2 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியாகவும் காணப்படும்.

  • தென்மேற்கு பருவமழையின் காலக்கட்டம் முடிவுறும் தருவாயில் இருந்தாலும், மேலும் ஒரு வாரத்துக்கு அதன் தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அனைத்து மாநிலங்களிலும் இயல்புக்கு அதிகமான மழை காணப்பட்டதால், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் தீவன மூலப்பொருள்களில் குறிப்பாக சோயா புண்ணாக்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றில் அதிகளவில் ஈரப்பதம் காணப்படுகிறது.

  • எனவே இதனைக் கவனத்தில் கொண்டு, தீவனம் தயாரிப்போர் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் மூலப்பொருள்களை பூஞ்சான் நச்சு பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

நோய்களைத் துவம்சம் செய்யும் நுண்ணுயிரிகள்!

English Summary: It is very important to test the poultry feed during the rainy season- Advice for poultry farmers! Published on: 01 October 2020, 04:14 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.