மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2021 5:39 PM IST
Credit: Dairy Today

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.150 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி 41 லட்சம் கால்நடை விவசாயிகளுக்கு விரைவில் கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையில் கடந்த ஆண்டில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் அறிவிப்பு (Prime Minister's announcement)

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நீதி தற்சார்பு இந்தியா தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.15.000 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பால்வளம், இறைச்சிப் பதனிடுதல் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பில் செய்யப்படும் அத்தகைய முதலீடுகளுக்கும், தனியார் துறையில் விலங்குத் தீவன ஆலையை நிறுவுவதற்கும், கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி வழி வகுக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)

தகுதியான பயனாளிகளுக்கு 3 சதவீதம் வட்டித் தள்ளுபடி வழங்கப்படும். இதுவரை இந்த நிதித் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தகுதியான பயனாளிகள் https://ahidf.udyamimitra.in/ என்ற இணையதளத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்.

தேசிய கால்நடை செயற்கை கருத்தரிப்பு திட்டம் (NAIP) 

இரண்டாவது கட்ட தேசிய கால்நடை செயற்கை கருத்தரிப்புத் திட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 604 மாவட்டங்களில் (ஒரு மாவட்டத்திற்கு 50,000 கால்நடைகள்) தொடங்கியது. இதுவரை 264 லட்சம் செயற்கை கருத்தரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, இதன் வாயிலாக 173 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

 கடன் அட்டை  (Credit Card)

கிசான் கடன் அட்டைகளின் வாயிலாக பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் கடன் பெறும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் 2.5 கோடி விவசாயிகள் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி பெற்று பயனடைவார்கள்.

41 லட்சம் (41 Lakh)

இதுவரை பால் சங்கங்களிடமிருந்து 51.23 லட்சம் விண்ண ப்பங்கள் பெறப்பட்டு, 41.40 லட்சம் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுக்கு விரைவில் கிசான் கடன் அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்!

ஓஹோவென விற்பனையாகும் ஒட்டகப்பால்- லாபம் தரும் சிறந்த தொழில்!

மாட்டுச் சாணத்திற்கு Advance Booking- நம்ப முடிகிறதா!

English Summary: Kisan credit card for dairy farmers to be issued to 41 lakh people soon!
Published on: 19 January 2021, 05:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now