Animal Husbandry

Tuesday, 05 October 2021 09:57 AM , by: Aruljothe Alagar

More profit with biofloc technology of fish farming!

இந்த கட்டுரை மீன் வளர்ப்பவர்களுக்கு மிகவும் சிறப்பான செய்திகளை தரவுள்ளது. இன்று இந்த கட்டுரையில் நாம் மீன் வளர்ப்பின் புதிய மற்றும் சிறப்பு நுட்பங்களைப் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம்

உண்மையில், நாங்கள் பயோஃப்ளாக் (Biofloc) தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுகிறோம். இந்த நுட்பத்தின் சிறப்பைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

பயோஃப்ளாக் தொழில்நுட்பம் என்றால் என்ன?

பயோஃப்ளாக் தொழில்நுட்பம் ஒரு சிறப்பு வகையான அறிவியல் நுட்பமாகும், இதில் குளம் ஏற்பாடு செய்வதற்கு மண்ணை தோண்டாமல் தொட்டியில் மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இந்த நுட்பத்தின் மூலம் மீனவர்கள் 250 சதுர அடி சிமெண்ட் தொட்டியை தங்கள் பண்ணையிலோ அல்லது சொந்த வீட்டிலோ தயாரித்து மீன் வளர்க்கலாம். நீங்கள் மீன் வளர்ப்பை ஒரு தொழிலாக செய்ய விரும்பினால், உங்களுக்கு குறைந்த இடம் இருந்தால் போதும், நீங்கள் பயோஃப்ளாக் முறை மூலம் மீன் வளர்ப்பை செய்யலாம்.

பயோஃப்ளாக் தொழில்நுட்பத்திற்கு எவ்வளவு செலவாகும்?

இந்த பயோஃப்ளோக் நுட்பத்துடன் மீன் வளர்க்க 28 முதல் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். நீங்கள் பெரிய அளவில் மீன் வளர்ப்பை செய்ய விரும்பினால், நீங்கள் அதில் அதிக அளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த நுட்பத்தின் விலை தொட்டியின் அளவைப் பொறுத்தது. நீங்கள் மீன் வளர்ப்பை சிறிய அளவில் செய்ய விரும்பினால், உங்கள் செலவு குறைவாக இருக்கும் மற்றும் நீங்கள் அதை பெரிய அளவில் செய்தால், உங்கள் செலவு சற்று அதிகமாக இருக்கும்.

பயோஃப்ளாக் தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்கின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகரைச் சேர்ந்த எட்டு விவசாயிகள் பயோஃப்ளாக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீன்கள் வளர்த்து அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டுகின்றனர். இந்த நுட்பத்திற்கு குறைந்த தண்ணீர் செலவாகும், அதே போல் குறைந்த இடத்தில் எளிதாக செய்ய முடியும் என்று சொல்லலாம். இந்த நுட்பம் இந்தோனேசிய தொழில்நுட்பம் என்றும் அழைக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்

  • இந்த தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகள் நிறைய நன்மைகளைப் பெற முடியும்.
  • இந்த நுட்பத்தில், மீன் வளர்ப்பை குறைந்த இடத்தில் செய்யலாம்.
  • இந்த தொழில்நுட்பத்திற்கு அதிக தண்ணீர் தேவையில்லை.
  • இந்த நுட்பத்தில் அதிக மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • இந்த நுட்பத்தின் மூலம் மீனின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
  • இந்த தொழில் நுட்பத்தின் மூலம் எளிதாக மீன் பிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும்.

அத்தகைய புதிய தொழில்நுட்பம் தொடர்பான மற்ற அனைத்து செய்திகளையும் அறிய க்ரிஷி ஜாக்ரன் தமிழ் போர்ட்டலுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க...

மீன் வளர்ப்பிற்கு மாட்டு சாணம் மற்றும் கோமியம்! நம்பமுடியாத வளர்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)