1. விவசாய தகவல்கள்

மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் : விளையும் நெல்லோடு மீன்னையும் வளர்க்கும் தொழில்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Fish farming technology

மீன் வளர்ப்பு என்பது குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒரு வணிகமாகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் 70 சதவிகித மக்கள் மீன் சாப்பிடுகிறார்கள். மீன்களுக்கான தேவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தேவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் மீனின் சுவை மற்றும் அதில் பல புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பது மட்டுமே.

இந்த கட்டுரையில் ஒரு சிறப்பு வகை மீன் வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ளலாம், இது மீன் விவசாயிகளுக்கு நல்ல வருமான ஆதாரமாக மாறும். இதுவே கூண்டு மீன் வளர்ப்பு ஆகும். மீன் வளர்ப்பு என்றால் என்ன, அது எவ்வாறு பயனளிக்கும் என்பதை அறிய இந்த கட்டுரையைப் படியுங்கள்.

கூண்டில் மீன் வளர்ப்பு என்றால் என்ன 

கூண்டில் மீன் வளர்க்கும் செயல்முறை மாரிகல்ச்சர் என்று அழைக்கப்படுகிறது. கூண்டு மீன்பிடித்தல் ஆங்கிலத்தில் கேஜ் ஃபிஷிங் என்று அழைக்கப்படுகிறது. மீன் வளர்ப்புக்காக ஒரு கூண்டு தயாரிக்க, இரண்டரை மீட்டர் நீளமும், இரண்டரை மீட்டர் அகலமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு பெட்டி தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்டியில் மீன் விதைகள் போடப்படுகின்றன. பெட்டியை சுற்றி கடலில் இருக்கும் களைகள் அதாவது மீன்கள் உண்ணும் பாசிகள் இருக்கும்.

கூண்டில் மீன்பிடித்தல் நன்மைகள் 

  1. மீன்களின் வளர்ச்சி நன்றாக உள்ளது.
  2. குறைந்த நாட்களில் மீன் பெரிதாகிறது.
  3. விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

கூண்டில் மீன்பிடித்தல் எப்படி இருக்க வேண்டும் 

  1. மீன் வளர்ப்பு இரண்டு வகையான கூண்டுகளில் செய்யப்படுகிறது. ஒரு நிலையான இடத்தில் நிலைத்திருக்கும் மற்றொன்று வேறு வகை மிதக்கும் விதமாக செய்வது.
  2. ஒரு நிலையான கூண்டை உருவாக்க நீரின் ஆழம் 5 மீட்டராக இருக்க வேண்டும்
  3. கடல் கூண்டின் ஆழம் 5 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.
  4. ஆக்ஸிஜன் நிறைய வேண்டும்.
  5. கூண்டில் உள்ள நீரின் ஆழம் 10 அடி இருக்க வேண்டும்.

விவசாயத்துடன் கூண்டில் மீன்வளர்ப்பதன் நன்மைகள் 

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது ஒரு சிறந்த வழி. விவசாய சகோதரர்கள் நெல் வயலில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரில் மீன் வளர்ப்பை செய்யலாம். இது மீன் அரிசி வளர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை விவசாயத்தில், நெல்லுடன், மீன் வளர்ப்பும் செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்  கிடைப்பது மட்டுமின்றி, மீன் விற்பனையிலும் பலன் கிடைக்கும். மீன் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகளின் உற்பத்தியை ஒரே வயலில் ஒரே நேரத்தில் அதிகரிக்க முடியும். பொதுவாக இது நெல் உற்பத்தியையும் பாதிக்காது. நெல் வயலில் மீன் வளர்ப்பது நெல் செடிகளின் பல நோய்களிலிருந்து விடுபடுகிறது.

விவசாயம் தொடர்பான ஒவ்வொரு செய்திகளையும் அறிய, க்ரிஷி ஜாக்ரன் இந்தி போர்ட்டலின் செய்திகளைப் படிக்கவும்.

மேலும் படிக்க...

மீன் வளர்ப்பு: ஆண்டுக்கு ரூ. 25,000 முதலீடு ! ரூ .2 லட்சம் வருமானம்

English Summary: Fish farming technology: The industry of raising fish with yielding paddy! Published on: 20 August 2021, 04:39 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.