Animal Husbandry

Wednesday, 17 February 2021 09:59 AM , by: Elavarse Sivakumar

Credit : JSTOR Daily

பல்மூலிகை மருந்தைப் பயன்படுத்தி, கறவை மாடுகளில் தோன்றும் முக்கியப் பிரச்னையான உண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

பல்மூலிகை மருந்து (Herbal medicine)

எனவே பல் மூலிகை மருந்தைத் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றிப் பார்ப்போம்.

தேவையானைப் பொருட்கள்

வேப்பஇலை

நொச்சி இலை

தயாரிக்கும் முறை (Preparation)

  • 4 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ வேப்ப இலையைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  • இதேபோல், 2 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ நொச்சி இலையையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.

  • கொதிநிலை வரை தனியாக வேகவைக்கவும். பின் மெதுவாக ஆற விட வேண்டும்.

  • இலைகளை வேகவைத்த பாத்திரங்களில் 12 நேரத்திற்கு ஊர விடவும்.

  • ஊறியபின் வேப்பம் மற்றும் நொச்சி சாற்றை தனித்தனியாகச் சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த சாறுகள் ஒரு மாதத்திற்கு மருத்துவ குணங்களை இழக்காது.

வெளிப்பூச்சுக்கு (External Apply)

  • மாடுகளின் மேல் வெளிப்புறப் பூச்சாகப் பயன்படுத்த 300 மி.லி வேப்ப மற்றும் 100 மி.லி நொச்சி சாற்றை எடுத்து 3.6 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்.

  • ஊறியயின் வேப்பம் மற்றும் நொச்சி சாற்றை தனித்தனியாக சேமித்து வைத்து கொள்ளவும் இந்த சாறுகள் ஒரு மாதத்திற்கு மருத்துவ குணங்களை இழக்காது.

  • மாடுகளின் மேல் பயன்படுத்த 300 மி.லி வேப்ப மற்றும் 100 மி.லி நொச்சி சாறை எடுத்து 3.6 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்.

  • கலந்தபின் கலவையை மாடுகளின் மேல் தெளிக்கவும். உடல் முழுவதும் மருந்து படுவதை உறுதி செய்யவும்.

  • நாள் ஒன்றுக்கு 2 முறை (காலை மற்றும் மாலை) என்று 2 நாட்களுக்கு தெளிக்கவும். உண்ணிகள் தொடர்ந்து நீடித்தால் 3-வது நாளும் தெளிக்கலாம்.

  • தெளிக்கும் போது உங்கள் பட்டியலில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் கட்டுதோரி பகுதியிலும் தெளிக்கவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உண்ணிகளை அறவேக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் படிக்க...

பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!

உணவுப் பூங்கா அமைக்க விருப்பமா?அழைக்கிறது மத்திய அரசு!

நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)