State

Sunday, 24 July 2022 01:46 PM , by: Poonguzhali R

தமிழகத்தில் விவசாயத்திற்கு என இலவசமாக மின் இணைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த மின் இணைப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் இலவச மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை முதலான விவரங்களை இப்பதிவு விளக்குகிறது.

மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!

வீடு, தொழில் சாலை, நிலம், வணிகப் பிரிவுகளில் மின் இணைப்புப் பெற விருப்பம் உடையவர்கள் மின் வாரிய இணையதள முகவரியான www.tangedco.gov.in என்ற இணையதளதிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால் விவசாயிகள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: IRCTC முன்பதிவில் புதிய மாற்றம்! இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

தேவையான ஆவணங்கள்

மேலும் படிக்க: அடடே: பள்ளிகளுக்கு மீண்டும் ஒருவாரம் விடுமுறையா? அரசு அறிவிப்பு! 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • www.tangedco.gov.in என்ற இணைய தள முகவரிக்குச் செல்லவும்
  • Apply Online- இல் LT New Service ரைட் கிளிக் செய்ய வேண்டும்.
  • அந்த பக்கத்தில் Apply-க்கு கீழே உள்ள New Service Connection-Agri என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது, மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி பெறவேண்டும்.
  • ஓடிபி-யை உள்ளிட்டதும் விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம்.
  • அடுத்ததாக, விண்ணப்பதாரர் வகை, பகுதி முதலான விவரஙகளான மாவட்டம்,
  • வட்டம், கிராமம் முதலானவைகளைப் பூர்த்திச் செய்தல் வேண்டும்.

மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!

  • விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி, மொபைல் எண் முதலானவற்றைக் கொடுத்தல் வேண்டும்.
  • அதன் பின்பு Agriculture and its allied activities என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்போது, நிலத்தின் பட்டா எண், சர்வே எண் முதலான நிலத்தின் விவரங்களைப் பூர்த்திச் செய்தல் வேண்டும்.
  • விஏஓ சான்றிதழ், தடையில்லா சான்றிதழ் முதலான தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பதிவுக்கட்டணம் ரூ. 118 -ஐச் செலுத்தி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

மேலும் படிக்க: TET/TRB: தற் மிடில் பெர்த் கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள். அதோடு, தேவையான ஆவணங்களைக் கையில் கொண்டு தெளிவுற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)