அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 June, 2022 11:22 AM IST
Rainfall in Chennai is unprecedented in the last 10 years!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, ஜூன் 20, திங்கட்கிழமை, சென்னை தரமணியில் 11 செ.மீ மழையும், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. எம்ஜிஆர் நகர் மற்றும் அயனாவரம் தாலுகா அலுவலகத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: பொறியியல் கலந்தாய்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!

திங்கள்கிழமையும் சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஜூன் 21 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 48.9 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 30.9 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. IMD புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 2016-ம் ஆண்டு சென்னையில் 53.2 மழை பெய்தது.

மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 21 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது.

மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஜூன் 22-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. “சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35˚C மற்றும் 26-27˚C ஆக இருக்கும்” என்று IMD திங்களன்று அதன் புல்லட்டின் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

ஆதார் விவரத்தைப் பாதுகாக்கும் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?

அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது எப்படி? இன்றே தொடங்குங்கள்!

English Summary: Rainfall in Chennai is unprecedented in the last 10 years!
Published on: 22 June 2022, 11:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now