அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 April, 2022 4:50 PM IST
Tamil nadu Ready to Ship rice, medicines to Sri Lanka

இந்திய கமிஷன் மூலம் அவற்றை விநியோகிக்க அனுமதி கோரப்பட்டு உள்ளது.  அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசிய ஸ்டாலின், இலங்கையில் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.

மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் உட்பட தீவு தேசத்தில் உள்ள தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தேச நடவடிக்கை மனிதாபிமான அடிப்படையிலானது என்று ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்தியக் கமிஷன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைமைத் தூதரகம் மூலம் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்கக் கோரினார்.  உணவின்றி பட்டினியால் வாடும் தமிழ்ச் சொந்தங்களுக்குப் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசிடம் ஸ்டாலின் அனுமதி கோரினார். இந்திய கமிஷன் மற்றும் தூதரகத்தின் ஊடாக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துத் தர வேண்டி முதலமைச்சர் அனுமதி வேண்டினார்.

மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். ஜெய்சங்கர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிற்கான நிதி உதவியின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக இந்தியா அண்மையில் அறிவித்திருந்தது.

இந்திய கமிஷன் புதன் கிழமையன்று இந்திய கடன் வரியின் கீழ் கொழும்புக்கு மேலும் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் வரவுள்ளதாக அறிவித்தது. கொழும்புக்கான அரிசி ஏற்றுமதியும் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் படிக்க...

அரிசி கிலோ ரூ.448- பால் லிட்டர் ரூ.263, ஒரு சவரன் தங்கம் ரூ.1.5லட்சம்!

MK Stalin: இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி,எரிவாயு இணைப்பு!

English Summary: Tamil Nadu Ready to Ship rice, medicines to Sri Lanka
Published on: 08 April 2022, 04:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now