1. விவசாய தகவல்கள்

விவசாய ஆராய்ச்சியில் டிரோன்கள் - மத்திய அரசு அனுமதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Drones in Agricultural Research - Government Permission to Use!
Credit : Unsplash

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையத்துக்கு, வேளாண் ஆராய்ச்சியில் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆம்பெர் துபே கூறுகையில்:

  • ஆளில்லா விமானங்களான டிரோன்களைப் (Drones)  பயன்படுத்தி வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட, இக்ரிசாட் அமைப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த அனுமதி, இக்ரிசாட் அமைப்பின் டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் திட்டம் (அலகு- 1) நிறைவேறும் வரை அல்லது ஆறு மாத காலத்துக்கு வழங்கப்படுகிறது.

  • வேளாண்மை குறித்த தரவுகளைச் சேகரிக்க ஆளில்லா விமானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • துல்லிய வேளாண்மை, வெட்டுக்கிளிகள் கட்டுப்பாடு, சாகுபடி அபிவிருத்தி ஆகிய வேளாண் துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு பெரும் பங்களிப்பை அளிக்கிறது.

  • இதன்மூலம் இளம் தொழில்முனைவோரும் ஆய்வாளர்களும் ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி நாட்டிலுள்ள 6.6 லட்சம் கிராமங்களில் வேளாண்மை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்றார்.

மேலும் படிக்க...

நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!

பயிர்களின் Big Boss-ஸாகத் திகழும் அசோபாஸ்!

மரம் நட விரும்புபவரா நீங்கள்? களம் அமைத்துத் தருகிறது ஈஷா!

English Summary: Drones in Agricultural Research - Government Permission to Use! Published on: 18 November 2020, 10:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.