1. விவசாய தகவல்கள்

2,500 ரூபாயாக உயருகிறது உர மானியம் - மத்திய அரசு அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Fertilizer subsidy rises to Rs 2,500 - Central Government announcement!

விவசாயிகளுக்கான உர மானியத்தை 2500 ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

விவசாயிகள் தங்களது விவசாயத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்த உர மானியம் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை எனவும், அதை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மானியத் தொகையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உர மானியத்தை தற்போதுள்ள 1,650 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

உர மானியம் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ரூ.6,000 கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மானிய உயர்வு ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரம் தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்த காரணத்தால் அதன் சுமையை வாடிக்கையாளர்களான விவசாயிகள் மீது சுமத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு உண்டானது.

எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்தான் தற்போது உர மானியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!

தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!

English Summary: Fertilizer subsidy rises to Rs 2,500 - Central Government announcement! Published on: 30 April 2022, 10:22 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.