1. விவசாய தகவல்கள்

PM Kisan: 65 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2000 பெற வாய்ப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya
PM Kisan Samman Nidhi & Kisan credit Card Details

பிரதமரின் PM கிசான் சம்மான் நிதித் திட்டம் அதாவது (PM kisan scheme) 10வது தவணையாக சுமார் 105,072,528 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2000-2000 ரூபாயை செலுத்தப்பட்டது. பதிவு சரியாக இருந்தால், 65 லட்சம் முதல் ஒரு கோடி விவசாயிகளுக்கு இப்போது பணம் கிடைக்கும், வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்திற்கு நீங்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பிக்க சரியான நேரம், இதுவாகும். இப்போது விண்ணப்பத்திற்காக எந்த அதிகாரியிடமும், செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

விவசாயிகள் தாங்களாகவே விண்ணப்பிக்கும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் படிவத்தை நிரப்பினால், மார்ச் 31 ஆம் தேதிக்குள் தற்போதைய தவணை பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

நாட்டில் சுமார் 11.50 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ், தங்களை பதிவு செய்துள்ளனர். மோடி அரசின் இந்த முக்கியமான உழவர் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட தொகை மூலம் விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது. இதன் மூலம் ஓராண்டில் கிடைத்த ரூ.6000 சிறு விவசாயிகளின் சாகுபடிக்கு உரம், விதைகள் போன்றவற்றை வாங்க உதவியாக உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது (How to Apply)

PM-Kisan இணையத்தளத்திற் (https://pmkisan.gov.in/) க்குச் சென்று நீங்களே விண்ணப்பிக்கலாம். இதற்காக எந்த அதிகாரியையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் மேலும் ஒரு நன்மையும் உள்ளது. நீங்கள் எளிதாக கிசான் கிரெடிட் கார்டை (KCC) எளிதாகப் பெறலாம். இதில் ரூ.3 லட்சம் கடன், 4 சதவீத வட்டியில் கிடைக்கும். அதன் படிவம் PM Kisan Schemeன் இணையதளத்திலும் கிடைக்கிறது குறிப்பிடதக்கது.

முதலில் இந்தத் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு வலது பக்கத்தில் FARMER CORNERS என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். அதில் NEW FARMER REGISTRATION என்பதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அதில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாயிகளின் விருப்பம் உள்ளது. இதனுடன் நீங்கள் எந்த மொழியில் படிவத்தை நிரப்ப விரும்புகிறீர்களோ, அந்த மொழியில் நிரப்பும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும் (This information must be given)

அதில் ஆதார் எண், மொபைல் எண், மாநிலத்தின் பெயரை உள்ளிடவும். இங்கே OTP மற்றும் கேப்ட்சாவை நிரப்பிய பிறகு, மற்றொரு படிவம் உங்களுக்குத் திறக்கும். இதில், மாநிலம், மாவட்டம், தாலுகா, தொகுதி மற்றும் கிராமம் நிரப்பப்பட வேண்டும். இதில் பாலினம் மற்றும் வகையை பூர்த்தி செய்து, வங்கி பெயர், கணக்கு எண், முகவரி, தாய், தந்தை அல்லது கணவர் பெயர், நில பதிவு ஐடி, ரேஷன் கார்டு எண், பிறந்த தேதி, நிலப் பதிவேடு ஆகியவற்றை சேமித்து வைக்க வேண்டும். இவை தொடர்பான சில ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் யார் பயன்பெற முடியாது? (who can not avail under this scheme?)

படிவத்தை பூர்த்தி செய்யும் போது, ​​நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாநில அல்லது மத்திய அரசில் உள்ள அதிகாரிகளும் இதற்குத் தகுதியற்றவர்கள். தற்போதைய அல்லது முன்னாள் மேயர், அமைச்சர், எம்எல்ஏ ஆகியோரும், இதற்கு தகுதியற்றவர்கள். அதேபோல், மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களும் இதில் விண்ணப்பிக்க முடியாது.

விவசாயிகள் இதுவரை பெற்ற தொகை எவ்வளவு? (How much have farmers received so far?)

இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ துவக்கம் டிசம்பர் 1, 2018 அன்று நடைபெற்றது. இதுவரை ரூ.1.81 லட்சம் கோடி விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் கீழ், 14.5 கோடி விவசாயிகளுக்கும் பணம் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது, ஆனால் இந்த இலக்கை 36 மாதங்களில் நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே, நீங்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், நீங்கள் தகுதியுடையவர் என்றால், விண்ணப்பிக்க சரியான நேரம் இதுவே, விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் படிக்க:

இன்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் என்ன?

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - வழிபாட்டுத்தலங்கள் மூடல்!

English Summary: PM Kisan: More than 65 lakh farmers have a chance to get Rs.2000 Published on: 11 January 2022, 11:33 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.