1. விவசாய தகவல்கள்

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Red Alert-Meteorological Center warns Nilgiris

நீலகிரியில் ஓரிரு இடங்களில் இன்று, கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

30.08.21

கனமழை ( heavy rain)

வடதமிழகத்தை ஒட்டிய அந்திர பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிதமான மழை (Moderate rain)

ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

31.08.21

கனமழை (heavy rain)

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

1.09.21 மற்றும் 2.09.21

வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழை பதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

28.08.21 முதல் 30.08.21 வரை

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி விளக்கம்!

English Summary: Red Alert-Meteorological Center warns Nilgiris Published on: 30 August 2021, 07:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.