
வாழை விளைபொருள் பதப்படுத்தும் சிறுநிறுவனங்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவியும், அதனை சந்தப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை ரூபாய் மானியம் வழங்கப்படும் என திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறுநிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தத் திட்டம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன்மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடனும் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
-
அதன்படி திருச்சி மாவட்டத்துக்கு ஒரு விளைபொருளாக வாழை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
-
தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவேஉணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்களை தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திதருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

Credit : Isha
-
மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉத விக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவை களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
-
திருச்சி மாவட்டத்தில் வாழை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபடவுள்ள சிறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீடு டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது.
-
வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
-
மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தேவைப்படும் தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
-
மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ(0431-2422142)தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்- தமிழகம் முழுவதும் இன்று செயல்படுகின்றன!
வீட்டிற்கே வரும் இயற்கை வேளாண் விளை பொருட்கள் - உழவர் சங்கத்தின் புதிய முயற்சி!
Share your comments