1. செய்திகள்

வங்கிக்கணக்கில் குவிந்த ரூ.11கோடி- அதிலும் ரூ.5 லட்சம் லாபம் பார்த்த கில்லாடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Accumulated Rs. 11 crore in the bank account - Killadi saw a profit of Rs. 5 lakh!

அதிகாரிகளின் குளறுபடிகளால் வங்கிக்கணக்கில் திடீரென பணம் வருவது வாடிக்கையான சம்பவமாக மாறி வருகின்றன. ஆனால், அப்படி வந்தப் பணத்தை வைத்து லாபம் சம்பாதித்திருகிறார் இந்த கில்லாடி நபர்.

குஜராத்தை சேர்ந்த ஒருவரது டிமேட் கணக்கில், ரூ.11,677 கோடி தவறுதலாக வரவு செய்யப்பட்டு அன்று இரவே பணம் மீண்டும் எடுக்கப்பட்டுவிட்டது. இடைப்பட்ட நேரத்தில், ரூ.2 கோடியை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதில் ரூ.5 லட்சம் பார்த்துள்ளார் அந்த பலே கில்லாடி.

ஆமதாபாத்தை சேர்ந்தவர் ரமேஷ் சாகர். பங்குவர்த்தக்கத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அவரது டிமேட் கணக்கில், கடந்த ஜூலை 26ம் தேதி, ரூ.11 ஆயிரத்து 677 கோடி வரவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை கண்டும் பதற்றப்படாமல், அந்த தொகையிலிருந்து ரூ.2 கோடியை பங்கு சந்தையில் உடனடியாக முதலீடு செய்திருக்கிறார்.

அதிலிருந்து அன்றைய நாளில், ரூ.5 லட்சம் லாபம் பார்த்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறாக பணம் வரவு செய்யப்பட்ட தகவலை தெரிவித்து, அன்றைய இரவு மீண்டும் பணத்தை வங்கி திரும்ப பெற்றுவிட்டது. இடைப்பட்ட 8 மணி நேரத்தில், ரமேஷ் சாகர் தனது புத்திசாலிதனத்தால் ரூ.5 லட்சம் சம்பாதித்திருக்கிறார்.

சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரது வங்கி கணக்கில், இப்படி தவறுதலாக ரூ.50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட, அவர், சில மணி நேரம், உலக பில்லியனர் பட்டியலில் 25வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

English Summary: Accumulated Rs. 11 crore in the bank account - Killadi saw a profit of Rs. 5 lakh! Published on: 18 September 2022, 10:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.