1. செய்திகள்

அஞ்சலக சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் ரூ.500 கட்டாயம் - தவறினால் கணக்கு முடக்கப்படும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தபால்களைக் கொண்டு சேர்க்கும் அஞ்சலகங்கள், கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை, லட்சக்கணக்கானோர் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கின்றனர்.

அவ்வாறு தொடங்கப்பட்ட சேமிப்புக்கணக்கில், 50 ரூபாய் மட்டும் மினிமம் பேலன்ஸ், அதாவது குறைந்தபட்ச இருப்புத்தொகையாக வைத்துக்கொள்ளலாம்.

ரூ.500 கட்டாயம் (Minimum Balance)

ஆனால், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய விதிகளின்படி, சேமிப்புக்கணக்கில், குறைந்தது 500ரூபாய் மினிமம் பேலன்ஸ்-ஸாக வைக்க வேண்டியதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரூ.100 அபராதம் (Fine)

மினிமம் பேலன்ஸாக ரூ.500 வைக்கத் தவறினால்,  அந்த நிதியாண்டு முடிவில் உங்கள் கணக்கில் இருந்து 100ரூபாய் அபராதமாகப் பிடித்தம் செய்யப்படும்.

கணக்கு முடக்கம் (Account Closed)

இது மட்டுமல்ல, இன்னொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சேமிப்புக்கணக்கில் எந்த பைசாவும் இல்லாது இருந்தால், அதாவது ஜீரோ பேலன்ஸ் உள்ள சேமிப்புக் கணக்குகள் அஞ்சலக நிர்வாகத்தால் உடனடியாக முடக்கப்படும்.

ஆதார் இணைப்பு கட்டாயம் (Aadhaar link)

இதேபோல், உங்கள் அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால், அரசு வழங்கும் மானியங்கள் எதுவும் உங்களுக்கு வந்து சேராது.

அஞ்சலக சேமிப்புதாரர்கள், இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளாவிட்டால், இழப்பை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க...

ரேஷன் கார்டு இல்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்குவது எப்படி? விபரம் உள்ளே!

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

English Summary: It is mandatory to keep a minimum balance of Rs.500 in the postal savings account - Published on: 25 August 2020, 07:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.