1. செய்திகள்

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு! 2079, 29 பேர் பலி!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Covid Test

இன்று தமிழ்நாட்டில் 2079 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,35,402 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பரவலால் 29 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று 2,743 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,73,781 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டுமே இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது- 29. மொத்த பாதிப்பு 25,35,402 ஆகவும் இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,743 மற்றும் இன்று சோதனை செய்யப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகள் 1,43,429 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஜூன் மாதம் முதல் தினசரி பாதிப்பு குறைந்து வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு , தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிந்தது. 

மேலும் படிக்க:

வட்டியே இல்லாமல் ரூ. 60 ஆயிரம் வரை கடன்: அவசர தேவைக்கு உதவும் Paytm!!

சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய சான்று தேவையில்லை

விவசாயிகளுக்காகப் பசுமைப் பேருந்து சேவை-தமிழகத்திலும் தொடங்கப்படுமா?

English Summary: One day corona damage in Tamil Nadu! 2079, 29 killed! Published on: 19 July 2021, 11:06 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.