1. செய்திகள்

தென் மாவட்டங்களில் பரவலாக மழை: ஓரிரு தினங்களில் சென்னை மற்றும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையும்

KJ Staff
KJ Staff

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழையின் காரணமாகவும், வெப்பசலன காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இன்னும் ஓரிரு தினங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என வானிலை ஆராய்சசி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சனிகிழமை கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான முத்ல்  கனமான மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை  தொடர்ந்து நல்ல மழை பெய்தது வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேனி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கன மழை பெய்யது வருகிறது. 

வட  மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அனல் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சில  குறிப்பிட்ட இடங்களில் 30-40 கி.மீ காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Southwest Monsoon Reached Kerala And Few Parts In Tamil Nadu Also: Expects Temperature Will Go Down Published on: 13 June 2019, 11:35 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.