1. செய்திகள்

சிவகங்கையில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயம் - வேளாண் துறை தகவல்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நடப்பாண்டு சிவகங்கை மாவட்டத்தில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில்

மண் பரிசோதனை மேற்கொள்ள முகாம் 

பயிர் வளர்ச்சிக்கு தேவையான 16 வகை சத்துக்கள் மண்ணில் உள்ளன. மண்ணில் உள்ள சத்துகளின் அளவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உரமிடுதல், பயிர் தேர்வு செய்வதன் மூலம் விவசாயிகள் உரசெலவினை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மண் ஆய்வு செய்திட வசதியாக தற்போது அனைத்து வட்டாரங்களிலும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பயிர் சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக கோடைக்காலங்களில் பயிர் இல்லாத தருணத்தில் மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்தல் சிறந்தது. நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 5,900 மாதிரிகள் சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனைக்கு ரூ.20 கட்டணம் செலுத்திட வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்: வேளாண் துறை அறிவுரை!!

English Summary: Target to collect 5,900 soil samples in Sivagangai says Agriculture Department Published on: 03 June 2021, 07:16 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.