1. மற்றவை

அஞ்சல் சேமிப்புத் திட்டங்களுக்கு ஏப்ரல் 1 முதல் விதிமுறைகள் மாற்றம்!

R. Balakrishnan
R. Balakrishnan

Postal Savings

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய 2023-24ஆம் நிதியாண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று முக்கிய விதிமுறைகள் மாற இருக்கின்றன. இந்த விதிமுறை மாற்றம் குறித்தும், அதனால் யாருக்கு பயன் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக மாத வருமான திட்டம்

அஞ்சலக மாத வருமான திட்டத்துக்கான (Post office Monthly Income scheme) அதிகபட்ச டெபாசி வரம்பு 4 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டு கணக்குகளுக்கு (Joint account) அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன் திட்டம்

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கு (Senior citizen savings scheme) அதிகபட்ச டெபாசிட் வரம்பு 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சீனியர் சிட்டிசன்கள் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பயன்பெறலாம்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்

2023 மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (Mahila Samman Savings certificate) என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இத்திட்டம் அமலில் இருக்கும். பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் 7.5% வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க

ஏப்ரல் முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு: வெளியான நற்செய்தி!

இந்தியாவின் முதல் குளோனிங் பசுங்கன்று கங்கா: தேசிய பால்வளத்துறை சாதனை!

English Summary: Changes in norms for Postal Savings Plans from April 1!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.