1. மற்றவை

தினமும் ரூ.50 முதலீடு - ரூ.35 லட்சம் வரை கிடைக்கும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Daily investment of Rs.50 - Get up to Rs.35 Lakhs!

எதிர்காலத்திற்கானச் சேமிக்க விரும்புபவராக இருந்தால், இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில், இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.50 தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானத்தைப் பெறலாம்.

கிராமப்புறங்களில் அஞ்சலகங்கள் மக்களுக்கு நம்பகமான சேமிப்பு இடமாக செயல்பட்டு வருகின்றது. அஞ்சலகம் வாயிலாக அரசும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய அஞ்சலகத் திட்டங்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம்.

இது அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால் பலரும் இதில் தைரியமாக முதலீடு செய்கின்றனர். இது, பாலிசி எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாற்றுவதற்கான கூடுதல் அம்சத்துடன் கூடிய முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும்.

வயது

இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது 19 முதல் 55 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிமியம்

நீங்கள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10,000 முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை பாலிசி எடுக்கலாம். பாலிசி எடுக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இந்த திட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

வசதிகள்

இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் சரண்டர் செய்தால் நீங்கள் போனஸ் பெற தகுதியற்றவர், பாலிசி சரண்டர் செய்யப்பட்டால் , குறைக்கப்பட்ட தொகைக்கு விகிதாசார போனஸ் வழங்கப்படும்.

ரூ.50

கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.50 தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானத்தைப் பெறலாம். 

ரூ.34.60 லட்சம்

ஒவ்வொரு மாதமும் பாலிசிதாரர் பாலிசியின் கீழ் ரூ.1,515 முதலீடு செய்தால், ஒவ்வொரு நாளும் தோராயமாக ரூ.50 செலுத்தும்பொழுது பாலிசி மதிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், அதன் முதிர்வுக்குப் பிறகு அந்த நபருக்கு ரூ.34.60 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் 55 வருட காலத்திற்கு ரூ.31,60,000 மாஸ்டரும் 58 ஆண்டுகளுக்கு ரூ.33,40,000 மற்றும் 60 வருட காலக் காலத்திற்கு ரூ.34.60 லட்சம் பெறுவார்.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

English Summary: Daily investment of Rs.50 - Get up to Rs.35 Lakhs! Published on: 15 August 2022, 10:23 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.