Animal Husbandry

Sunday, 22 November 2020 10:10 AM , by: Elavarse Sivakumar

Credit : Twitter

கால்நடைகளுக்கு நம் வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். தகுந்த நேரத்தில் சிறந்த சிகிச்சையும் கவனிப்பும் கிடைக்கும். இதனை சாத்தியமாக்கியிருக்கிறது மகாராஷ்டிர அரசு.

மகா பசுதன் சஞ்ஜீவனி யோஜனா (Maha Pashudhan Sanjeevani Yojana) என்ற திட்டத்தின் கீழ் இந்த சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக மகாராஷ்டிரா அரசு, Bharat Financial Inclusion Limited (BFIL) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு வீடுகளில் வைத்தே சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கட்டணமில்லாத் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொண்டாலே போதும். உடனடியாக மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பர். இதற்காக 1962 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் வரும் ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

முதற்கட்டமாக மகாராஷ்டிராவின் 31 மாவட்டங்களைச் சேர்ந்த 81 தாலுக்காகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும் செயல்படுத்துமா?

இத்தகை சிறந்த திட்டங்களை தமிழக அரசும் செயல்படுத்துமா? என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

ஈஷாவின் சிறப்பு சேவை- சிறைக் கைதிகளிடத்தில் பரிவு!

மஞ்சளில் இலைப்புள்ளி நோய் - பாதுகாக்க என்ன செய்வது?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)